இலங்கை அணிக்கு பெரிய இழப்பு! ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகியுள்ளதால், இலங்கை அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை ஓபனிங் பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி பபுளில் இணைவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
ஏற்கனவே காயம் காரணமாக வனிந்து ஹசரங்க விலகியுள்ள நிலையில், தற்போது அவிஷ்கா விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு பதிலாக குசால் மெண்டிஸ் இலங்கை அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.