பிரித்தானியாவில் அக்டோபர் முதல் நடைமுறைக்கும் வரும் புதிய விதிமுறை!
பிரித்தானியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு (Vaccine Passport) கட்டாயமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மக்களை குறிப்பாக இளைஞர்களை தடுப்பூசி போட வைப்பதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து வருகிறது.
அந்த வகையில், பிரித்தானியாவில் அக்டோபர் முதல் பிரீமியர் லீக் விளையாட்டு போன்ற பெரிய நிகழ்வுகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இந்த விதிமுறையானது பிற விளையாட்டு பிரதீவுகளுக்கும், 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் திறன் கொண்ட நிகழ்வுகளுக்கும் கட்டாயப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
நடைமுறையில், இரண்டு தடுப்பூசிகளைப் போடாத ரசிகர்களை அணுமதிக்காமல் தடை செய்யமுடியுமா? என்பது குறித்து பிரீமியர் லீக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி செய்வதன் மூலமாக மக்கள் தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும், அதே சமயம் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி என்பதற்ககு ரசிகர்கள் மிகவும் அவசியம், அதனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி திட்டடத்தை செயல் செயல்படுத்திக் கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தடுப்பூசி போடாதவர்கள் அல்லது போட முடியாதவர்கள், தங்களுக்கு கோவிட் நெகட்டிவ் என்ற சோதனை முடிவை காட்டினாள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சிறிய இசை நிகழ்ச்சிகள் போன்ற இருக்கைகள் அல்லாத நிகழ்வுகளுக்கு 5,000 பங்கேற்பாளர்கள் வரை அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.