பிக்பாஸ் 5-ல் வென்ற பின்பு ராஜு செய்த நெகிழ்ச்சி செயல்! பாராட்டும் மக்கள்
பிக்பாஸ் 5 சீசனில் வென்ற பின்பு ராஜு செய்த செயல், மக்களிடையே மிகப் பெரிய பாராட்டை பெற்று வருகிறது.
தமிழில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், பிரபல நடிகரான ராஜு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும், படத்தை இயக்குவதற்கு தயாரிப்பாளர்கள் ரெடியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது ராஜு தனக்கு கிடைத்த பரிசு பணத்தில், சிறிய தொகையை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்து உதவியுள்ளதாக, பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.