UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி - பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர்
UPSC தேர்வில் தேர்ச்சி பெறாமலே தேர்ச்சி பெற்றதாக ஒருவர் மோசடி செய்த நிலையில், அவரை பாராட்டியே பொலீசாரே அவரை கைது செய்துள்ளனர்.
UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மோசடி
2025 ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானதில் நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
பீகாரின் ஷேக்ஸ்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தான் இந்த தேர்வில் 440வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த கிராம மக்கள் அவரை கொண்டாட தொடங்கினர். கிராமத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த பகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சாம்ராட் அவருக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து கௌரவித்தார். மேலும், பரிசுபொருளும் வழங்கினார்.
மேலும் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மேற்கோள் காட்டியதோடு, மற்ற தேர்வர்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் படிக்கும்போது, தான் எப்படி வெறும் 4 மணி நேரம் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றேன் என்பதையும் குறிப்பிட்டார்.
பாராட்டியே பொலீசாரே கைது செய்தனர்
மஹூலி காவல் நிலைய ஆய்வாளர் ராம்பிரவேஷ் பார்தி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கௌரவித்தார்.

அதன் பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் UPSC தேர்ச்சி பட்டியலை சரிபார்த்த போது 440வது இடத்தை பிடித்தது பீகாரை சேர்ந்த ரஞ்சித் குமார் இல்லை, கர்நாடகாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஆர் என்பது தெரிய வந்தது.
இதனை உறுதிப்படுத்த அடையாள ஆவணங்களுடன் காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன் பின்னர் அவர் தனது செல்போனை அணைத்து விட்டு மயமாகியுள்ளார்.
Ranjeet Yadav, Bihar man who fraudulently claimed to have cracked UPSC with 440 rank was arrested by the same cop who took his interview soon after the result. https://t.co/VcJmepkPpH pic.twitter.com/yQrBkP0Z53
— Piyush Rai (@Benarasiyaa) March 17, 2026
தற்போது அவருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்த காவல் ஆய்வாளர் ராம்பிரவேஷ் பார்தியே அவரை கைது செய்துள்ளார்.

இதே போல் மற்றொரு பீகார் பெண்ணும் தேர்ச்சி பெறாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளாகவும் அவரையும் கைது செய்ய வேண்டுமென சமூக ஊடக பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |