வீட்டில் இருந்தே ஸ்மார்ட் போன் மூலம் தேர்தலில் வாக்களிக்கலாம் - இந்திய மாநிலத்தில் அறிமுகம்
இந்தியாவில் முதல் மாநிலமாக, ஸ்மார்ட்போன் மூலம் வாக்கு செலுத்தும் நடைமுறையை பீகார் அறிமுகப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறையை நடைமுறையில் உள்ளது.
ஏற்கனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என அதன் நம்பகத்தன்மையை அரசியல் கட்சிகள் கேள்விக்குள்ளாகி வருகின்றன.
ஸ்மார்ட் போன் மூலம் வாக்கு
இந்நிலையில், நாட்டிலே முதல் மாநிலமாக, ஸ்மார்ட்போன் மூலம் வாக்கு செலுத்தும் நடைமுறையை பீகார் மாநிலம் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்காக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்(C-DAC) ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது. மேலும், பீகார் மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டத்தைத் தடுப்பதையும், பாதுகாப்பான வாக்களிப்பை உறுதி செய்வதையும் நோக்கிலும், பிளாக்செயின் ஒருங்கிணைப்பு, நேரலை இருப்பிடத்தை கண்டறிதல்(liveness detection), முக அங்கீகாரம்(facial recognition) மற்றும் நேரடி முக ஒப்பீடு(live face scan and face comparison) உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த செயலியில் உள்ளன.
யாரெல்லாம் வாக்களிக்க முடியும்?
மேலும், மின்னணு வாக்குபதிவில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை vvpat முறையில் வாக்காளர்கள் காண்பது போல், இந்த செயலியிலும் காண முடியும்.
வாக்குச்சாவடிக்கு நேரடியாக வரமுடியாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தே வாக்களிக்க முடியும்.
பீகாரில் வரும் 28 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், இந்த நடைமுறையை பீகார் மாநில தேர்தல் ஆணையம் அமுல்படுத்த உள்ளது.
இந்த செயலி மூலம் 50,000 பேர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்க முடியும். 10,000 வரை தற்போது இதற்காக பதிவு செய்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எப்படி வாக்களிப்பது?
ஒரு ஸ்மார்ட் போனில், அதிகபட்சமாக 2 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யலாம். எந்த போனில் பதிவு செய்தோமோ, அந்த போனில் இருந்து மட்டுமே வாக்களிக்க முடியும். Front Camera உள்ள ஸ்மார்ட் போனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
नगरपालिका आम निर्वाचन 2025 के ई-वोटिंग हेतु मतदाता पंजीकरण एवं मतदान की प्रक्रिया
— State Election Commission, Bihar (@SECBihar) June 23, 2025
जिला: पटना (खुसरुपूर, नौबतपुर, बिक्रम), रोहतास (कोचस), पूर्वी चम्पारण (मेहसी, पकड़ीदयाल) में #ई-वोटिंग करने हेतु डाउनलोड करें ऐप -
eVoting SECBHR लिंक:https://t.co/RLVoqmfeVN pic.twitter.com/ttUCzz4oDs
தேர்தல் நாளில், அந்த செயலியில் Vote என்பதை கிளிக் செய்த பின், அதன் பின் தோன்றும் அறிவுரைகளை கவனமாக வாசிக்க வேண்டும். அதை தொடர்ந்து, வாக்காளர் தங்களது விவரங்களை பகிர்வதற்கான சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும்.
அதன் பின்னர் வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண்ணை கொடுத்து ‘Submit’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அது சரிபார்க்கப்பட்ட பின் ‘Device Authenticated’ என்ற குறுஞ்செய்தி வரும்.
அதைத்தொடர்ந்து, வாக்காளர் அப்போது நேரலையில் Selfie எடுத்து அதில் சமர்பிக்க வேண்டும்.
அது சரிபார்க்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியலில், யாருக்கு வாக்களிக்க விரும்புகிறோமோ அவரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு வலது பக்கம் உள்ள ‘Vote’ என்பதை க்ளிக் செய்து வாக்களிக்கலாம்.
20 வினாடிகளுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும். மேலும், வாக்கு செலுத்தியதற்கான சான்றாக வாக்காளர்களின் எண்ணுக்கு குறுஞ்செய்தியும்(SMS) அனுப்பப்படும்.
முன்னதாக, வாக்காளர் சரிபார்ப்புக்கான முக அங்கீகார அமைப்பு (FRS), வாக்கு எண்ணிக்கைக்கான OCR மற்றும் EVM இயந்திரங்களைப் பாதுகாப்பதற்கு அது வைக்கப்பட்டுள்ள அறைகளில் டிஜிட்டல் பூட்டு போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பீகார் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |