கணவர் உயிரை காப்பாற்றுங்கள்! கெஞ்சிய மனைவியின் உடையை இழுத்து மோசமாக நடந்த மருத்துவ ஊழியர்கள்.. அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் புதிய தகவல்
இந்தியாவில் மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா பாதித்த தனது கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அவர் முறையாக பொலிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த ரவுஷன் சந்திரா - ருச்சி தம்பதி கடந்த மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை கொண்டாட பீகார் வந்தனர்.
இந்த நிலையில் ரவுஷனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அந்த மருத்துவமனையில் தான் ருச்சி கனவிலும் நினைத்து பார்த்திராத மிக மோசமான விடயங்கள் நடந்தேறியது.
ரவுஷனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததோடு, ருச்சியின் உடையை இழுத்தும், அவர் இடுப்பில் கை வைத்தும் அங்குள்ள ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.
கணவருக்கு சிகிச்சையளிக்குமாறு ருச்சி கெஞ்சிய போதே ஊழியர்கள் சிலர் இரக்கமின்றி இவ்வாறு மோசமாக நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் ரவுஷன் உயிரிழந்தார், கொரோனா வைரஸால் தனது கணவர் இறக்கவில்லை, மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் இறந்தார் என ருச்சி நடந்த அனைத்தையும் செய்தியாளர்களுக்கு முன்னால் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ருச்சியிடம் தவறாக நடந்து கொண்டதாக மருத்துவமனை ஊழியர் ஜோதி குமார் என்பவரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
ருச்சி கூறுகையில், என்னிடம் தவறாக நடந்து கொண்ட அனைவர் மீதும் பொலிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவுள்ளேன்.
இதோடு பொலிஸ் உயர் அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நிச்சயம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையில் சிறப்பு அணிகளை அமைத்து ருச்சி விடயம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.