வெளிநாட்டில் ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடிய ஜேர்மன் வீரர்கள்: இராணுவம் அதிரடி நடவடிக்கை
லிதுவேனியாவில் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ஜேர்மன் இராணுவ வீரர்கள், அங்கு ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடியதற்காக பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
ரஷ்யாவிடமிருந்து லிதுவேனியா, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளை பாதுகாப்பதற்காக நேட்டோ சார்பில் லிதுவேனியாவில் முகாமிட்டுள்ளார்கள் ஜேர்மன் இராணுவ வீரர்கள்.
அங்குள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற அந்த வீரர்கள், அளவுக்கு மீறி குடித்துவிட்டு, அங்கு கலாட்டா செய்துள்ளார்கள். ஹிட்லருக்கு அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாடியதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் மீது இனவெறுப்பு, யூத வெறுப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
ஆகவே, உடனடியாக ஜேர்மனி திரும்பும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
30 இராணுவ வீரர்கள் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில், பிரச்சினைக்கு
முக்கிய காரணமானவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.