பாகற்காய் சாப்பிடுவதால் இது மாதிரியான தீமைகள் உண்டா? கவனமாக இருங்க
பாகற்காய் கசப்பு என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் அதில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளது. பாகற்காயில் கலோரிகள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.
நன்மைகள்
தினமும் காலையில் துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம், இதன்மூலம் ஆஸ்துமா, சளி, இருமல் குணமாகும்.
பாகற்காயையோ, அதன் இலைகளையோ போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் நோய்த்தொற்றுகள் அண்டாது.
பாகற்காய் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
தீமைகள்
தினமும் பாகற்காயை சரியான அளவில் சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு குறையும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.