இந்த காய்கறிகளை அதிகளவு எடுத்து கொண்டால் கூட பல பக்கவிளைவுகள் உண்டாம்
பொதுவாக காய்கறிகள் உடலுக்கு நன்மையைத் தரும் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், சில காய்கறிகளை அதிக அளவில் உட்கொண்டால் அவை நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
எந்த ஒரு உணவையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளவோ அல்லது குறைவாக எடுத்துக் கொள்ளவோக் கூடாது. சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மட்டுமே எந்த ஒரு உணவும் நமக்கு நன்மையைக் கொடுக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாக தானே மாறும் அதனை மனதில் கொள்ள வேண்டும். அந்தவகையில் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாதாக காய்கறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கேரட்டை அதிக அளவில் உட்கொண்டால், உங்கள் சருமத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். சருமம் மஞ்சள் நிறமாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாக மாறவும் வாய்ப்புள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் சருமத்திலேயே தேங்குகிறது. இந்த நிற மாற்றம் உங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் மட்டுமே தெரியும்.
- ப்ரோக்கோலி பச்சையாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். அதேபோல் காலிபிளவரையும் சிலர் பச்சையாக சாப்பிடுவர். இது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் சர்க்கரை உள்ளதால் அதிகமாகவும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
- கத்திரிக்காயை பச்சையாக சாப்பிட்டால் உங்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படும். கத்திரிக்காயில் காணப்படும் சோலனைன் என்னும் பொருள் நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல் அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும் அரிப்பு போன்ற சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.
- காளானை அதிக அளவு உட்கொள்வது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது குமட்டல், வயிற்றுப் பிடிப்பு, வாந்தி போன்ற பல செரிமான பிரச்சனைகள் நமக்கு ஏற்படும். எனவே காளானை சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பீட்ரூட்டை சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களின் மூலம் உணவில் சேர்த்திக் கொள்வர். அதேபோல் பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து ஜுஸாகவும் எடுத்துக் கொள்வர். எந்த அளவுக்கு ஒரு விஷயத்தில் நன்மை உள்ளதோ அதே அளவு தீமையும் இருக்கும் என்பது பீட்ரூட்டுக்கும் பொருந்தும். பீட்ரூட்டில் ஆக்சலேட் நிறைந்துள்ளது. இது அதிக அளவு சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.