இது தான் என் கடைசி போட்டி! இந்தியாவை எப்படியாவது ஜெயிச்சடனும்: ஓய்வு குறித்து அறிவித்த நியூசிலாந்து வீரர்
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான பிஜெ வாட்லிங், வெற்றியுன் தான் ஓய்வு பெற விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் 35 வயது மதிக்கத்தக்க பிஜெ வாட்லிங் கூறுகையில், காயத்திலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஒரு கிரிக்கெட் வீரனாக காயம் அடைவதெல்லாம் அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் இதுபோன்ற சமயத்தில் அதில் இருந்து சீக்கிரமாக குணமாகி வந்தது ஒரு நல்ல விடயமாக இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். இந்த இறுதிப் போட்டியானது, ஐசிசி கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரைக் நாங்கள் கைப்பற்றி இருப்பதால் அது எங்களுக்கு மனரீதியான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் இது என்னுடைய கடைசி சர்வதேச போட்டி என்பதால், வெற்றியுடன் ஓய்வு பெற நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.