ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரான நரேந்திரன் வெறும் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுகவே வெற்றி பெற்று வருகிறது, அதிமுக வின் கோட்டையாக கருதப்படும் இடங்களில் கூட திமுகவினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனியாக தேர்தலை சந்தித்த பாஜக-வுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஈரோடு பவானி சாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளார்.