கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மூன்று மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக
இந்திய சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இவற்றில் தெலங்கானாவை தவிர்த்து ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக அதிக இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது.
இதன்மூலம் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இந்த மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |