வென்டிலேட்டரில் இருக்கும் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீரை குடிக்க வைத்தாரா பாஜக தலைவர்? சிக்கிய வீடியோ
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீர் குடிக்க வைத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச் செயலாளர் கிஷோர்பாய் பிண்டாலே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என பாஜக-வினரால் புகழ்படப்பட்ட குஜராத் மாநிலத்தின் அவலநிலையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கொரோனா.
குஜராத்தில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகள் வெளியில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்துக்கிடந்த வீடியோக்கள் மற்றும் கொத்து கொத்தாக கொரோனாவில் இறந்தவர்களின் சடலங்கள் எரியூடப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இந்தியாவையே கலங்க வைத்தது.
இப்படிப்பட்ட குஜராத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச் செயலாளர் கிஷோர்பாய் பிண்டால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது, ஜூஸ் கொடுப்பது, தனது போன் மூலம் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச வைப்பது என அனைத்தை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் பெண் கொரோனா நோயாளிக்கு குப்பியில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எதோ ஒன்றை குடிக்க வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டரில் தனது பக்கத்தில் பகிர்ந்த கிஷோர்பாய் பிண்டால், சிறிது நேரத்தில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
குறித்த வீடியோவை கண்ட பலர் கிஷோர்பாய் பிண்டால் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீரை குடிக்க வைத்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
What is this alleged BJP worker making a Covid patient, hooked up to a ventilator, drink?!
— Deepu (@deepusebastian) April 23, 2021
BJP's Surat General Secretary @kishorbindal deleted his tweet (https://t.co/LZZxDQC1XF).
fyi, @zoo_bear/ @free_thinker/ @DeepalTrevedie/ @LangaMahesh pic.twitter.com/9rIRzdn7Nr
கிஷோர்பாய் பிண்டால் குறித்த வீடியோவை நீக்கியதால் அது உண்மையில் பசுவின் சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தள்ளது.
எனினும், இந்த சர்ச்சை குறித்து சூரத் நகரின் பாஜக பொதுச் செயலாளர் கிஷோர்பாய் பிண்டாலும், அக்கட்சியினரும் என்ன விளக்கம் அளிக்கபோகிறார்கள் என பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.