இரத்த சர்க்கரையைக் இப்படி கூட கட்டுப்படுத்தலாம்! மருந்து, மாத்திரை வேண்டாம்!
பொதுவாக ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அது உடலில் அறிகுறிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.
அதிக அளவு மன அழுத்தம், தூக்கத்தை இழப்பது, காலை உணவை தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது அல்லது அதிக கார்ப்பன் உள்ள உணவை உட்கொள்வது மற்றும் மது அருந்துவது ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்ததால், உடனே இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
எனவே இவற்றை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வது அவசியமானதாகும்.
பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளது. மருந்துகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவும். ஆனால், மருந்துகள் இல்லாமல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில வழிகளை இங்கு காண்போம்.
- இரத்த சர்க்கரையைக் குறைக்க தினசரி உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை 64 சதவீதம் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
- நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். இதன் மூலம் அதிகப்படியான குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது. மனம் நிறைய சிரிப்பது இரத்த சர்க்கரை அளவை 48 சதவீதம் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்கள் நடைபயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மையை விட இரண்டு மடங்கு அதிகம் தான்.
- ஒவ்வொரு மூன்று மணி முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்வது உயர் இரத்த சர்க்கரையின் அபாயத்தை 32 சதவீதம் குறைக்கிறது. நன்கு நீரேற்றமாக வைத்து இருப்பது குளுக்கோஸை உற்பத்தி செய்யும் வாசோபிரசின் என்ற ஹார்மோனின் அளவை குறைக்கும்.
- மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் கோழி, மட்டன் இறைச்சியை எடுத்துக் கொள்வதுடன், கார்ப் நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அதிகரிப்பை 37 சதவீதம் குறைக்கும். இந்த உணவுகளில் உள்ள புரதம் மற்றும் பைபர் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை குறைவாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.