மீண்டும் நெருக்கடியில் பிரதமர் ரிஷி சுனக்: மூன்று மாதங்களில் சாதனை எண்ணிக்கை
சிறு படகுகளில் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் பெருமளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 மாதங்களில் மட்டும் 4,644 பேர்கள்
இந்த விவகாரத்தால் தற்போது பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரதமர் ரிஷி சுனக். இந்த 3 மாதங்களில் மட்டும் 4,644 பேர்கள் சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த நிலையை கட்டுப்படுத்த தவறினால், கண்டிப்பாக தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் வாக்குகளை இழப்பார் என்றே தேர்தல் கண்காணிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 7 சிறு படகுகளில் மொத்தம் 338 பேர்கள் பிரித்தானியாவில் நுழைந்துள்ளனர். இதுபோன்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள உள்விவகார அமைச்சகம், ருவாண்டாவுக்கு மிக விரைவில் விமானம் புறப்பட இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய மக்களிடம்
ஆனால், பிரதமர் ரிஷி சுனக்கின் வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியை எதிர் தரப்பினர் முன்வைத்துள்ளனர். மட்டுமின்றி, இத்தனை ஆதாரங்கள் வெளியாகியுள்ள பின்னரும் ரிஷி சுனக் பிரித்தானிய மக்களிடம் சிறு படகு விவகாரத்தை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றே கூறி வருகிறார் என தொழில் கட்சி தரப்பு விமர்சித்துள்ளது.
பிரதமர் இல்லத்தில் பதுங்கியிருக்கும் அவரால் இதை பார்க்க முடியவில்லையா? இல்லை நாங்கள் கவனிக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறாரா எனவும் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |