விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரு நபர்.., 11A இருக்கை முன்பதிவுக்கு முந்தும் பயணிகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தக்குள்ளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் விழுந்த வேகத்தில் அதில் இருந்த எரிபொருள் வெடித்ததால் இந்த விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கருதியுள்ளனர்.
அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் விபத்தில் பலியாகினர். ஒரே ஒரு நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விமானத்தில் பயணித்த இந்திய வம்சாவழியை சேர்ந்த விஸ்வாஸ்குமார்(40) என்ற தொழிலதிபர் மட்டும் விபத்தில் தப்பியது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, உயிர் பிழைத்த விஸ்வாஸ்குமார் அமர்ந்திருந்த 11A இருக்கை எப்போதுமே அதிர்ஷ்டமான இருக்கை என்ற அடையாளத்தை பெற்றுள்ளது.
இந்த இருக்கை போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்த ஜன்னலுக்கு அருகே அமைந்திருக்கும்.
இது மற்ற இருக்கைகளை விட சற்று இடைவெளி அதிகமாக இருக்கும். மேலும், இந்த இருக்கை அவசர கதவிற்கு மிக அருகில் உள்ளது.
மேலும், விமானத்தின் இறக்கை பகுதிக்கு அருகே இந்த 11A இருக்கை அமைந்திருக்கும்.
அகமதாபாத் விபத்தை பொறுத்தவரை 11A இருக்கை இருந்த இறக்கை பகுதி பலமாக இருந்ததால் அது சேதமடையாமல் உடைந்திருக்கிறது.
அதன் வழியாக விஸ்வாஸ்குமார் வெளியே குதித்து உயிர் தப்பித்துள்ளார். இந்நிலையில் விமானத்தில் 11A இருக்கை உலகம் முழுவதும் ராசியானதாக மாறியுள்ளது.
இதனால் விமானத்தில் 11A இருக்கையை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |