ஊதியம் பத்தலை... மீண்டும் முணுமுணுக்கும் பிரதமர் போரிஸ் ஜோன்சன்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமக்கான ஊதியம் 157,000 பவுண்டுகள் போதுமானதாக இல்லை என மீண்டும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், அவர் தனது வருவாயில் மிகப்பெரிய தொகையை இழந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
முதன்மை பத்திரிகை ஒன்றில் வாரம் ஒரு கட்டுரைக்கு என ஆண்டுக்கு 275,000 பவுண்டுகள் வரை ஊதியமாக பெற்று வந்தார் போரிஸ் ஜோன்சன்.
பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அந்த தொகையை இழக்க நேரிட்டது. மட்டுமின்றி முன்னாள் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதில் தமது சேமிப்பில் பெரும்பகுதி அதில் செலவழிந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.
தற்போது செலவுகள் அதிகரித்துள்ளதால், பிரதமர் போரிஸ் மீண்டும் சம்பளம் பத்தலை என புகார் கூற தொடங்கி விட்டாராம்.
தமது இரண்டாவது மனைவியுடனான விவாகரத்து வேளையில் இருவருக்கும் பொதுவான இல்லத்தை 3.35 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஆனால் தமது புதிய மனைவிக்காக தெற்கு லண்டனில் 1.2 மில்லியன் பவுண்டுகளுக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், Oxfordshire உள்ள இல்லம் ஒன்று வாடகைக்கு விடப்பட்டுள்ளதில் இருந்து மாதம் 4,250 பவுண்டுகள் பெற்று வருகிறார்.
இது மட்டுமின்றி, Exmoor பகுதியில் அமைந்துள்ள ஜோன்சன் குடும்ப இல்லத்தில் இவருக்கு 20% பங்குகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.