பிரித்தானியா மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜோன்சன்! ஏன் தெரியுமா?
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா விதிமுறைகளை மீறியதற்கான மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமராக இருக்கும் போரிஸ்ஜோன்சன் அந்த கட்டுப்பாடுகளை மீறி விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டது.
இதனால், அவரது இந்தச் செயலுக்கு கடந்த ஓர் ஆண்டாகவே எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன, அதுமட்டுமின்றி போரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், கொரோனா விதிகளை மதிக்கும் லட்சக்கணக்கான பிரித்தானியா மக்களுக்கு என் செயல் எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது.
இந்த அவை மூலமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் போரிஸ் ஜோன்சனின் மன்னிப்பை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பல மாத மறுப்புக்குப் பிறகு போரிஸ் கூறியிருக்கும் இந்த மன்னிப்பு பயனற்றது. சரி, இப்போதாவது போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.