இதற்கு பணம் எங்கிருந்து வந்தது? விஸ்வரூபமெடுக்கும் ஊழல்! சர்ச்சையில் சிக்கிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன்
டவுனிங் தெருவில் உள்ள தனது குடியிருப்பை புதுப்பித்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சம் வாக்குறுதி அளித்துள்ளார்.
டவுனிங் தெருவில் உள்ள போரிஸ் ஜான்சனுக்கு சொந்தமான தனியார் குடியிருப்பை புதுப்பிக்க செவலவான பணத்தை நன்கொடையாளர்கள் செலுத்தியாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் கன்சர்வேடிங் கட்சியினர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
10 டவுனிங் தெருவில் உள்ள குடியிருப்பை விட பெரியதாக இருப்பதால் ஜான்சன், அவரது வருங்கால மனைவி மற்றும் அவர்களது குழந்தை 11 டவுனிங் தெருவில் இருக்கும் தனியார் குடியிருப்பில் வாழ்கின்றனர்.
11 டவுனிங் தெருவில் உள்ள குடியிருப்பின் புதுப்பித்தல் பணிகளுக்கு நிதி மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் அல்லது குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூறியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தொரு முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் உறுதியளித்துள்ளார்.
அதேசயம், பிரதமரின் ஆலோசகர் Lord Geidt என்பவரும் குடியிருப்பு புதுப்பித்தல் ஊழல் தெடர்பாக விசாரித்து வருகிறார்.
Lord Geidt முழுமையாக சுதந்திரமாக செயல்படவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.