அந்த நாட்டு வைரஸ் பிரித்தானியாவிலும் பரவ துவங்கிவிட்டது... கவனமா இருங்க! பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதங்களில் உருமாற்றம் அடைந்து தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக தற்போது, இந்தியாவில் இரண்டு விதமாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதி தீவிரமாக பரவி, பலரின் உயிரை எடுத்து வருகிறது. இதனால் இந்தியாவிற்கு உலக நாடுகள், தங்களிடம் இருக்கும் மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவி வருகின்றன.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரித்தானியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
அந்த வைரஸை கையாள்வதில் நாம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நாம் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளோம். வீடு வீடாக சோதனை செய்யப்பட உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்றம் அடைந்த வைரஸால், அங்கு தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று 65 சதவீதம் வரை குறைந்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக 2,000-க்கும் குறைவானவர்களே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.