கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு பரிசு: அறிவித்த நிறுவன மேலாளருக்கு நேர்ந்த கதி
சுவிஸ் நிறுவனம் ஒன்றின் மேலாளர், நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் யார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையோ, அவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.
Vaud மாகாணத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் நோட்டீஸ் போர்டில் இந்த அறிவிப்பை அவர் ஒட்டியிருந்தார்.
அத்துடன், இனப்படுகொலையாகிய சர்வாதிகாரத்துக்கு இணங்காதவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இதைச் செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைக் குறித்து அந்நிறுவனத்தின் தலைவருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த மேலாளர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.