காருக்குள் வைக்கும் Water Bottle-ஆல் தீ விபத்து நிகழலாம்!!! ஓர் எச்சரிக்கை தகவல்
வெயில் அதிகமான நாட்களில் காருக்குள் Water Bottle-யை வைப்பது கார் தீப்பிடிக்க வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சிறு பிள்ளைகள், லென்ஸ் ஒன்றை வைத்து சூரிய ஒளியை காகிதத்தின் மீது குவித்து, காகிதத்தை எரிய வைப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்,
ஏன் நாமே சிறுவர்களாக இருக்கும்போது அதைச் செய்ய முயன்று பெற்றோரிடம் குட்டு வாங்கியும் இருக்கலாம்.
அதே முறையில்தான் Water Bottle-யை காருக்குள் வைப்பதும் தீப்பிடிக்க வழிவகுக்கிறது.
அமெரிக்காவில் வாழும் Dioni Amuchastegui, மதிய உணவின்போது தன் காரை கவனிக்க, காருக்குள் புகை வருவதை கவனித்துள்ளார்.
முதலில் அது சூரிய ஒளியில் தெரியும் தூசியாக இருக்கலாம் என்று எண்ணிய Dioni, காரின் கண்ணாடிகள் மூடியிருக்கும்போது எப்படி காருக்குள் தூசி பறக்கும் என்று தோன்றவே, காருக்கருகில் சென்று பார்க்க, அதிர்ந்துபோயிருக்கிறார்.
அவர் தனது Water Bottle-யை காருக்குள் வைத்திருக்க, கார் கண்ணாடி வழியே சூரிய ஒளி செல்ல, Water Bottle லென்ஸ் போல் செயல்பட, ஓரிடத்தில் குவிந்த ஒளி தீயை உருவாக்கியிருக்கிறது.
Dioni சரியான நேரத்தில் அதை கவனித்திருக்கவில்லை என்றால், அவரது கார் தீப்பற்றி சேதமடைந்திருக்கலாம்.
ஆகவே, Water Bottle-யை காருக்குள் விட்டுச் செல்வதைவிட, அதை உங்களுடனேயே
எடுத்துச் செல்வது உங்கள் தாகத்தைத் தணிக்க உதவுவதுடன், உங்கள் காரையும்
காப்பாற்றும் என்கிறார் Dioni.