9 வயது சிறுவன் மின்னல் தாக்கி பரிதாப பலி! பிரித்தானியாவில் சற்று முன்பு நடந்த சோகம்
பிரித்தானியாவில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் லங்காஷைர் மாகாணத்தில் உள்ள ப்ளாக்பூல் நகரத்தில் குறித்த பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் Spirit of Youth எனும் ஜூனியர் கால்பந்து அணியின் உறுப்பினர் என கூறப்படுகிறது. அவன் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஸ்கூல் சாலை பகுதியில் உள்ள வெட்டவெளி மைதானத்தில் தனியார் கால்பந்து பயிற்சியில் கலந்துகொண்டுள்ளான்.
அப்போது, திடீரென விழுந்த இடி மின்னலில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டான். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவாமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சற்று முன்பு அவன் பரிதாபமாக உயிரிழந்ததாக பிளாக்பூல் பொலிஸார் அறிவித்தனர். மேலும், சம்பவம் குறித்து மேற்கட்ட விசாரணையை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்வத்தைத் தொடர்ந்து ஸ்கூல் சாலை மூடப்பட்டிருந்த நிலையில், அது இப்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்த கொடூரம், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
UPDATE: A nine-year-old boy has sadly died following an incident on a football field shortly after 5.05pm today. Although enquiries are still ongoing, we believe the boy was struck by lightning. Our thoughts are with the boy's family at this sad time. School Road has reopened. pic.twitter.com/PNtFHo1Bwx
— Blackpool Police (@BlackpoolPolice) May 11, 2021