ப்ளூடூத் மூலம் செல்போனில் பேசி கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்! நடந்தது என்ன? ஒரு எச்சரிக்கை செய்தி
இந்தியாவில் ப்ளூடூத் ஹெட்போன் மாட்டிக்கொண்டு போன் பேசிய 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது நண்பனிடம் ப்ளூடூத் ஹெட்போனை மாட்டி கொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்தான்.
அப்போது திடீரென ப்ளூடூத் ஹெட்போனுடன் இணைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறியது.
இதையடுத்து காதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
சிறுவன் போன் வெடித்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.