ஆற்றில் மிதந்த சடலம்... சிறுவன் உட்பட மூவர் கைது
ஆற்றில் சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சர்ன், பிரிட்ஜென்ட் பகுதியில் சனிக்கிழமை சுமார் 5.45 மணியளவில் 5 வயது சிறுவன் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், Ogmore ஆற்றில் இருந்து சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த நிலையில் இளவரசி வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவர்கள் சிறுவன் இறந்ததாகவே உறுதியளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார், தற்போது 39 வயது நபர், 30 வயது பெண்மணி மற்றும் 13 வயதேயான சிறுவன் என மூவரை கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை கொலை வழக்காகவே பொலிசார் விசாரிக்க உள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய வேறு சந்தேக நபர்களை தேடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.