கடலில் நீந்தச் சென்றபோது மூளையைத் தின்னும் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன்...
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் கடலில் நீந்தச் சென்றபோது பயங்கர கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் ப்ளோரிடாவிலுள்ள Port Charlotte Beach என்ற கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, தண்ணீரில் நீந்தச் சென்றுள்ளான் Caleb Ziegelbauer (13) என்ற சிறுவன். அதைத் தொடர்ந்து ஐந்தாவது நாள் தலைவலியால் பாதிக்கப்பட்டதுடன், இல்லாதவற்றை இருப்பதுபோல் தோன்றச் செய்யும் hallucinations என்னும் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளான் Caleb.
முதலில் Calebக்கு மூளைக்காய்ச்சல் என நினைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பிறகுதான், அவன் Naegleria fowleri என்னும் மூளையைத் தின்னும் அமீபா என்னும் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Credit: NBC
இந்த பயங்கர நோய்க்கிருமி மூக்கின் வழியாக சென்று மூளைக்குள் நுழைந்துவிடக்கூடியதாகும். இந்த கிருமித் தொற்றுக்கு ஆளாகுவோர் உயிர் பிழைக்க 25 சதவிகித வாய்ப்புதான் உண்டு.
மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி வரும் Calebக்கு உதவுவதற்காக GoFundMe அமைப்பின் மூலம் பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
1962 முதல் 2021 வரை அமெரிக்காவில் இந்த கிருமித்தொற்றுக்கு ஆளான 164 பேரில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: NBC
This is a stock photo and not the same beach