உயிருக்கு உலை வைக்கும் மூளைக்கட்டி - வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைய காலக்கட்டத்தில் ஆபத்தான பிரச்சினைகளில் ஒன்று மூளைக்கட்டி. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
இந்த மூளைக் கட்டி அசாதாரண திசு வளர்ச்சி என்று சொல்கிறார்கள். இந்த திசு செல் கட்டுப்பாடில்லாமல் பெரிதாக வளர்ந்து மனித உயிருக்கே பேராபத்தாக்கிவிடும்.
சரி... இந்த மூளைக்கட்டியின் அறிகுறியும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம் -
மூளைக் கட்டியின் அறிகுறிகள்
ஒருவருக்கு மூளைக்கட்டி ஏற்பட்டால் அவர்களுக்கு
தலைவலி,
குமட்டல்,
வாந்தி மயக்கம்,
பக்கவாதம்
பேச்சு பிரச்சினை ஏற்படும்.
மூளைக்கட்டியிலிருந்து விடுபட வழிமுறைகள் -
பச்சைஇலை கீரைகள்
மூளைப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கேல், காலார்ட்ஸ், சுவிஸ் சார்ட் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இந்தக் கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக்கட்டிகளை தடுக்கும். இந்த கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு சேர்மங்களும் அதிகம் உள்ளதால் இந்தப் பிரச்சினையிலிருந்து நம்மை பாதுகாத்துவிடும்.
சிலுவை காய்கறிகள்
ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இவற்றை சாப்பிட்டால் நாம் மூளை புற்றுநோயிலிருந்து விடுபடலாம். மேலும், இவற்றில் சல்ஃபோராபேன் அதிகமாக இருப்பதால் மூளைக் கட்டிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் மூளைக்கட்டி உருவாகும் அபாயத்தை குறைத்து விடுகிறது. அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது.
நட்ஸ்கள்
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ்களை சாப்பிட்டு வர வேண்டும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இவை மூளைக்கட்டிகளை உருவாக்குவதை தடுக்கிறது.
மஞ்சள்
மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் மூளையில் ஏற்படும் வீக்கத்தை தடுத்து நிறுத்தும். மேலும், தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.