கனடாவில் பெற்றோரின் அனுமதியின்றி வழக்கத்துக்கு மாறான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: நீதி கோரும் பெற்றோர்

Canada
By Balamanuvelan Jul 11, 2022 12:27 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில், பெற்றோரின் அனுமதியின்றி வித்தியாசமான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தை ஒன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஒன்ராறியோவைச் சேர்ந்த மணீஷ், ஸ்வாதி பட்டேல் தம்பதியருக்கு 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆனால், ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சி அந்த பெற்றோருக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆம், ஆனந்த் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை, இரண்டே நாட்களில் உயிரிழந்துவிட்டான்.

சுருக்கமாக, குழந்தை இறந்துவிட்டது என்று இந்த சம்பவத்தைக் கூறி முடித்துவிடமுடியாது. காரணம், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு தவறுகல் நிகழ்ந்துள்ளன.

கனடாவில் பெற்றோரின் அனுமதியின்றி வழக்கத்துக்கு மாறான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: நீதி கோரும் பெற்றோர் | Brampton Couple Newborn Baby Death

கர்ப்ப காலத்தில், ஸ்வாதியும், அவரது கர்ப்பத்திலிருந்த குழந்தையும் ஆரோக்கியமாக இருந்த நிலையில், Brampton Civic Hospital என்ற மருத்துவமனையில் நிகழ்ந்த பிரசவத்தின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது போலும். ஆகவே, மருத்துவர்கள் பிரசவத்துக்கு vacuum-assisted delivery என்ற முறையில் பிரசவம் பார்த்துள்ளார்கள். புரியும்படி கூறவேண்டுமானால், நண்பன் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பிரசவம் பார்ப்பாரே அதுபோன்ற, ஆனால், மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு நடைமுறை அது.

குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்கும்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், குழந்தையின் பெற்றோரின் அனுமதியின்றி இந்த vacuum முறையில் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். அப்போது குழந்தையின் தலையிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஆனால், அது தாயின் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறிய இரத்தம் என்று நினைத்து மருத்துவர்கள் விட்டுவிட்டிருக்கிறார்கள்.

குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்ததும், ரொரன்றோவிலுள்ள Sick Kids hospital என்ற சிறப்பு மருத்துவமனைக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் வரை குழந்தை முறைப்படி கவனித்துக்கொள்ளப்படவில்லையாம்.

கனடாவில் பெற்றோரின் அனுமதியின்றி வழக்கத்துக்கு மாறான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: நீதி கோரும் பெற்றோர் | Brampton Couple Newborn Baby Death

Sick Kids hospitalஇன் மருத்துவர்கள் வந்து பார்க்கும்போது, குழந்தை வெளிறிப்போயிருக்கவே, அதற்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இரத்தம் ஏற்ற ஏற்ற, குழந்தையின் தலையிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியிருக்கிறது.

ஆக, குழந்தையின் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்பதையே Sick Kids hospital ஊழியர்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும், குழந்தைக்கு ஏற்கனவே ஏராளம் இரத்தம் வெளியேறிவிட்டதால், அதன் இதயத்தால் போதுமான அளவில் இரத்தத்தை உடலில் மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியாததால், அதன் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் துவங்கியுள்ளன. குழந்தையின் மூளையும் சேதமடைந்துள்ளது.

இரண்டு நாட்களில் குழந்தை ஆனந்த் இறந்துவிட்டிருக்கிறான்!

இவ்வளவு தவறுகள் நிகழ்ந்தும், Brampton Civic Hospital மருத்துவமனை, குழந்தைக்கு என்ன நேரிட்டது என்று பெற்றோரிடம் கூறவும் இல்லை, vacuum முறையில் பிரசவம் பார்க்க ஒப்புதல் பெறவும் இல்லை என்பதுடன் தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்கவில்லையாம்.

இது தொடர்பாக, ஒன்ராறியோ மருத்துவர்கள் அமைப்பிடம் குழந்தையின் பெற்றோர் புகாரளித்துள்ள நிலையில், Brampton Civic மருத்துவமனை, முறைப்படி மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள் குழந்தையின் பெற்றோர்.

ஒன்ராறியோ மருத்துவர்கள் அமைப்பின் பதிலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எனக்கு நீதி கிடைக்கும் வரை, என்னால் இயன்றவற்றைச் செய்வேன் என்கிறார் ஸ்வாதி!  

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US