நள்ளிரவில் பொலிஸிக்கு வந்த தகவல்! பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் பெருவாரியான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
பிரித்தானியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பெருவாரியான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Old Trafford செஸ்டர் சாலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, Old Trafford செஸ்டர் சாலையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஏப்பரல் 28ம் திகதி இரவு 11.55 மணிக்கு எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றினர்.
பொது ஒழுங்கு குற்றத்திற்காக 20 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அதிகாரிகள் செஸ்டர் சாலையில் தேடினர், பின்னர் சந்தேகத்திற்கிடமான சில பொருட்களைக் கண்டுபிடித்தனர், மேலும் அதை ஆய்வு செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் சம்பயிடத்திற்கு வரவுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தீயணைப்புத்துறையுடன் இணைந்து செயல்படுகிறது என மான்செஸ்ட்ர் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.