பிரித்தானியாவில் சாரதிகள் தட்டுப்பாட்டுக்கு பிரெக்சிட்தான் காரணம்: வெளுத்து வாங்கும் ஜேர்மனியின் புதிய சேன்ஸலர் வேட்பாளர்
நேற்றுதான் அவரது கட்சி ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றது... அதற்குள் பிரித்தானியாவை காட்டமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார் அவர். அவரது பெயர் Olaf Scholz (63).
சிறிய வித்தியாசத்தில் ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியை வென்ற SPD கட்சியின் சேன்ஸலர் வேட்பாளர் அவர்.
பிரித்தானியாவில் தற்போது நிலவும் சாரதிகள் தட்டுப்பாட்டுக்கு பிரெக்சிட்தான் காரணம் என்கிறார் அவர்.
பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் முதல் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு உதவ ஜேர்மன் சாரதிகளை அனுப்புவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Scholz, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறாமல் இருக்க பிரித்தானியாவை சம்மதிக்க வைப்பதற்காக மிகவும் பாடுபட்டோம். அவர்களோ வேறு மாதிரியான முடிவெடுத்தார்கள். அப்படியானால், அதன் மூலம் வரும் பிரச்சினைகளையும் அவர்கள் சமாளித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.
Scholz, வெற்றி பெற்ற இதர கட்சிகளுடன் சேர்ந்து விரைவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.