புயல்வேகத்தில் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: வெளியேறிய வீரருக்கு லேசான மூளையதிர்ச்சி
ஜிம்பாப்பே அணியின் துடுப்பாட்ட வீரர் பிரையன் பென்னட்டின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்கா டிக்ளேர்
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்பே அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. கைடனோ (0), நிக் வெல்ச் (4) அடுத்தடுத்து வெளியேறினர்.
வெளியேறிய பிரையன் பென்னட்
எனினும் பிரையன் பென்னட் அதிரடியாக பவுண்டரிகளை விரட்டினார். அவர் 19 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மாபாகா வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கியது.
இதில் பிரையன் பென்னட் (Brian Bennett) சற்று நிலைகுலைந்துபோனார். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது லேசான மூளை அதிர்ச்சி அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் ரிடையர் ஹர்ட் முறையில் பென்னட் வெளியேறினார். மேலும் அவர் புலவாயோ டெஸ்டில் தொடர்ந்து விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக பிரின்ஸ் மஸ்வாரே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |