கோலிக்கு இது தான் முதல் முறை! இப்படி செய்திட்டாரே: கடும் அதிர்ச்சியில் லாரா
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா கூறியுள்ளார்.
வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். கோலியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த வகையில் மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாராவும் இது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல இணையதளமான cricket.com-ல் கூறுகையில், கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தவுடன் நான் சற்று அதிர்ச்சியில் இருந்தேன்.
ஏனெனில், அவர் இந்த அணிக்காக சிறந்த சேவையை செய்து வருகிறார். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடி, அந்தணிகள் அனைத்தையும் வீழ்த்தியுள்ளார். அவர் தன் நாட்டிற்காக மகத்தான வேலையை செய்துள்ளார்.
இது ஒரு டி20 கேப்டனாக அவருக்கு முதல் உலகக்கோப்பை தொடர், அதற்குள்ளே இப்படி ஒரு முடிவு என்பது பெரிய விஷயம் தான், இருப்பினும் அவர் விலகுவது நல்லது தான் என்று நான் நினைக்கிறேன்.
இதன் மூலம் அவர் விளையாட்டின் மற்றொரு பக்கம் கவனத்தை செலுத்த முடியும். ஏனெனில், நான் கேப்டனாக விளையாடும் போது, இந்த பிரச்சனைகள் இருந்தன.
சில முறை மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது, கோலியின் இந்த முடிவு தனிப்பட்ட முடிவு மட்டுமில்லை, இந்திய கிரிக்கெட்டிற்காக அவர் மேலும் சிறப்பான சேவை செய்ய எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்று நம்புவதாக கூறியுள்ளார்.