மணமகன் செயலால் வெறுப்பாகி மணமேடையில் வேறு நபரை மணந்த மணமகள்! மறுநாள் நடந்த ஆச்சரியம்
இந்தியாவில் திருமண நிகழ்வில் ஆர்வம் காட்டாமல் மணிக்கணக்கில் மணமகன் நடனம் ஆடியதால் கோபமடைந்த மணப்பெண் அதே இடத்தில் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மணிக்கணக்கில் ஆட்டம் போட்ட மணமகன்
மகாராஷ்டிர மாநிலத்தின் மல்காபூர் பங்கரா கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. தகவல்களின்படி, மணமகன் சரியான நேரத்தில் மணமகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
திருமண ஊர்வலம் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் மணப்பெண் வீட்டார் அதிருப்தியில் இருந்தனர். பிறகு வந்த மணமகன் திருமண சடங்குகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் மது போதையில் நண்பர்கள், குடும்பத்தாருடன் மணிக்கணக்கில் ஆட்டம் போட்டபடி இருந்தார்.
Asianet News Hindi
திருமணம் நிறுத்தம்
பல மணி நேரம் காத்திருந்த பிறகு, மணப்பெண்ணின் தந்தை நடனத்தை நிறுத்திவிட்டு திருமணத்திற்கு வருமாறு கூறியபோது, குடிபோதையில் இருந்த அங்கிருந்த நபர்கள் அவரையும் மணமகளின் குடும்பத்தினரையும் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியதையடுத்து மணமகன் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
அவதூறு ஏற்படாமல் இருக்க, மணப்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகளின் நண்பரையே சம்மதிக்க வைத்து இருவருக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது.
திடீர் திருமணம்
இருப்பினும், வினோதமான நிகழ்வுகளின் தொடர் அங்கு முடிவடையவில்லை. மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் அவருக்கும் திருமணத்தை நிச்சயித்து வேறு பெண்ணை அவர் மணந்து கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், இரண்டாவது திருமணத்தின் போது, மணமகன் தரப்பில் இருந்து யாரும் ஒரு சொட்டு மது கூட அருந்தவில்லை.
freepik