திருமண மண்டபத்திற்கு செல்லமுடியாத படி சிக்கிய மணப்பெண்! பின் சாதுர்யமாக செய்த செயல்: வீடியோ
இந்தியாவின் பெங்களூர் நகரில் தனது திருமணத்திற்கு சென்ற மணப்பெண் டிராஃபிக்கில் சிக்கிய நிலையில் சாதுர்யமாக மெட்ரோ ரயிலில் பயணித்து திருமண மண்டபத்திற்கு சென்றிருக்கிறார்.
டிராஃபிக்கில் சிக்கிய மணப்பெண்
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் எப்போதும் டிராஃபிக் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு செல்வதற்காக டிராஃபிக் நிறைந்த சாலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதன்படி காரில் சென்றுக் கொண்டிருந்த அந்த மணப்பெண் பெங்களூருவின் டிராஃபிக்கில் சிக்கியதால் குறித்த நேரத்திற்குள் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக மணக் கோலத்தில் இருந்தவர் காரில் இருந்து இறங்கி மெட்ரோ நிலையத்துக்குச் சென்று ரயிலில் ஏறி முகூர்த்த நேரத்திற்குள் சென்றடைந்திருக்கிறார்.
Whatte STAR!! Stuck in Heavy Traffic, Smart Bengaluru Bride ditches her Car, & takes Metro to reach Wedding Hall just before her marriage muhoortha time!! @peakbengaluru moment 🔥🔥🔥 pic.twitter.com/LsZ3ROV86H
— Forever Bengaluru 💛❤️ (@ForeverBLRU) January 16, 2023
மெட்ரோ ரயில்
இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள், நல்ல வேளை மெட்ரோ இருக்கவே உதவியாக இருந்திருக்கிறது. மெட்ரோ ரயில் இல்லாமல் இருந்தால் என்னவாவது?” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதேவேளையில் ஒருவேளை இது விளம்பரமாக இருக்குமோ? என்றும், பொதுவாக மணமக்கள் திருமணத்துக்கு முந்தைய நாளே மண்டபத்திற்கு சென்றிடுவார்கள். இதைப் பார்த்தால் பப்ளிசிட்டிக்காக செய்ததை போல இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதே போல மெட்ரோ இல்லாமல் போயிருந்தால் திருமணமே ரத்தாகியிருக்கும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.