அதிகரிக்கும் எண்ணிக்கை... மீண்டும் மாஸ்க் கட்டாயம் என அறிவித்த முக்கிய நகரம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, மாஸ்க் கட்டாயம் என்பதை அறிவித்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரு மாதத்திற்கு முன்பு நீக்கியது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம். இந்த நிலையிலேயே முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மாஸ்க் கட்டாயம் என மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சனிக்கிழமை முதல் மாஸ்க் கட்டாயம் என்ற விதி அமுலுக்கு வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தினசரி 1,000 பேர்களுக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் நகர நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
நோய்த்தொற்று விகிதங்கள் மீண்டும் குறையும் வரையில் புதிய மாஸ்க் கட்டாயம் என்ற விதிமுறை நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, கடுமையான தனிமனித இடைவெளி விதிகளை அமுலுக்கு கொண்டுவந்த மாகாணங்களில் கலிபோர்னியாவும் ஒன்று.
மொத்த மக்கள் தொகையில் 51% மக்கள் முழுமையாக தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 52% மக்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.