வெளிநாட்டு ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி: குடும்பத்தினர் வெளியிட்ட அச்சம்
பாகிஸ்தான் நாட்டில் சொகுசு ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய விஞ்ஞானி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பொலிசாருக்கு கோரிக்கை
பாகிஸ்தானில் உள்ள சொகுசு ஹொட்டல் ஒன்றில் 44 வயதான ஃபரூக் அலி என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. அவரது சடலம் ஐந்து நாட்களாக குறித்த ஹொட்டலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
@swns
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என குடும்பத்தினர் பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, பிராட்ஃபோர்ட் பகுதியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து அஞ்சலி கூட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஃபரூக் அலி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஞ்ஞானியும் வளர்ந்துவரும் எழுத்தாளருமான ஃபரூக் அலி பாகிஸ்தானில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தமது புதிய நூல் ஒன்றிற்காக தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 11ம் திகதி அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் கண்டெடுக்கப்படும்போது, அவரது வாயில் இருந்து ரத்தமும் நுரையும் காணப்பட்டுள்ளது.
மொத்த குடும்பத்தையும்
இதனையடுத்து, ஃபரூக் அலி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது சகோதரிகள் எழுப்பியுள்ளனர். ஃபரூக் அலி கொல்லப்பட்டுள்ளது, எங்கள் மொத்த குடும்பத்தையும் தண்டிப்பதற்கு ஒப்பான செயல் என தெரிவித்துள்ளார் யாஸ்மின் என்ற ஒரு சகோதரி.
@swns
இவர் பிராட்ஃபோர்ட் பகுதியில் சட்டத்தரணியாகவும் செயல்பட்டு வருகிறார். நரம்பியல் நிபுணரான இன்னொரு சகோதரி ரெஹியானா தெரிவிக்கையில், பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் ஹொட்டலில் தங்கும் ஒரு விருந்தாளியை அங்குள்ள ஊழியர்கள் ஐந்து நாட்கள் வரையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மட்டுமின்றி, ஃபரூக் அலி சடலத்தை பிரித்தானிய மருத்துவர்கள் மறு பரிசோதனைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் யாஸ்மின்.