ஜேர்மனியில் பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
A British woman stabbed to death at train station in Germany: ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பிரித்தானிய இளம்பெண்ணொருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில், பொலிசார் Rosenheim என்னும் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்த நிலையில், அங்கு 31 வயதுடைய பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், சம்பவ இடத்திலிருந்த 27 வயது ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கும் எந்த பெண்ணுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டா, எதற்காக அவர் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தினார் என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |