பிரித்தானியாவில் 40,000 செவிலியர்கள் பற்றாக்குறை... இருந்தும் மொத்தமாக வெளியேற திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர்கள்

United Kingdom
By Balamanuvelan Aug 26, 2024 05:30 AM GMT
Report

பிரித்தானியாவில் சுமார் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அப்படி இருந்தும், செவிலியர் பணி செய்யும் ஏராளமான வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

இக்கட்டான நிலையில் செவிலியர் பணி செய்யும் வெளிநாட்டவர்கள்

பிரித்தானியாவில் செவிலியர் வேலை என்றதும், மனதில் கனவுகளுடன் வரும் வெளிநாட்டவர்கள் பலர், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும் சில விதிகளால், வறுமைக்குள் தள்ளப்படும் ஒரு அபாயம் நிலவுகிறது.

உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

அதாவது, பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவோர், ஐந்து ஆண்டுகளுக்கு அரசு உதவியை பெறுவதை சில விதிகள் தடுக்கின்றன.

ஆகவே, ஆசையுடன் பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த செவிலியர்கள் பலர், கடன் வாங்கும் நிலையும், உணவில்லாமல் வேலை செய்யும் நிலையும் காணப்படுவதாக Royal College of Nursing (RCN) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அவர்கள் தற்காலிக விசாவில் வேலைக்கு வருவதால் , அவர்களால் குழந்தைகளுக்கான அரசின் நிதி உதவி, வீட்டுக்கான உதவி முதலான எந்த அரசு உதவியையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பெறமுடியாது.

பிரித்தானியாவில் 40,000 செவிலியர்கள் பற்றாக்குறை... இருந்தும் மொத்தமாக வெளியேற திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர்கள் | Britain Has A Shortage Of 40 000 Nurses

ஆகவே, வறுமையில் வாடும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதாவது, பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருகிறீர்களா? உங்களைக் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது, உங்களால் எங்கள் நாட்டுக்கு என்ன நன்மை என்பதுதான் எங்களுக்கு முக்கியம், என அரசு புலம்பெயர்ந்தோரைப் பார்த்து கூறுவதுபோல இருக்கிறது என்கிறார் பாதிக்கப்பட்ட ஒரு பெண்.

மொத்தமாக வெளியேறும் நிலையில் வெளிநாட்டவர்கள்

குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காக சொந்த நாட்டைவிட்டு பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த நிலையில், அங்கும் வறுமையில் வாழவேண்டும் என்ற நிலை உருவானால் என்ன செய்வது?

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய ஜேர்மானியர்கள்: பக்கத்து நாட்டு பொலிசார் தெரிவித்துள்ள தகவல்

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய ஜேர்மானியர்கள்: பக்கத்து நாட்டு பொலிசார் தெரிவித்துள்ள தகவல்

அப்படி வேலை பார்த்து என்ன பயன்?

ஆகவே, செவிலியர் பணி செய்யும் ஏராளமான வெளிநாட்டவர்கள், நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே பிரித்தானியாவில் சுமார் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இருந்தும், செவிலியர் பணிக்கு வரும் வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவின் விதிகளால் வறுமைக்குள் தள்ளப்படும் நிலை காணப்படுவதால், பலர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த வெளிநாட்டு செவிலியர்கள், உள்நாட்டு செவிலியர்களைப்போலவே வரி செலுத்துகிறார்கள், சட்டப்படி காப்பீட்டுக்கு பணம் செலுத்துகிறார்கள். அப்படி இருந்தும், அவர்களுக்கு அரசின் உதவிகள் மறுக்கப்படுகின்றன.

இதனால் அவர்கள் வறுமைக்குள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளதுடன், நோயாளிகள் நலனும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆகவே, இந்த செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அரசின் நிதி உதவி பெற முடியாது என்னும் விதியை நீக்கவேண்டும் Royal College of Nursing அரசைக் கோரியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US