ஆப்கானிஸ்தான் நிலையை கண்டு உயிர மாய்த்துக்கொண்ட இராணுவ வீரர்கள்?
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டு படைகள் வெளியேறியதால் மனமுடைந்த சில இராணுவ வீரர்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக பரவி தகவல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
20 வருட ஆப்கானிஸ்தான் பேரில் பிரித்தானியா சுமார் 457 இராணுவ வீரர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக திங்கட்கிழமை Sky News-யிடம் பேசிய பிரித்தானியாவின் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் James Heappey, கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் நிலையை கண்டு மனமுடைந்த சில இராணுவ வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என கூறினார்.
பின்னர் பிபிசி-க்கு பேட்டியளித்த James Heappey, தனது கருத்திலிருந்து பின்வாங்கினார், இராணுவ வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்ற அவரது கருத்து தவறானது என கூறினார்.
கடந்த சில நாட்களில் சில வீரர்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்களா இல்லையா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என பிபிசி-யிடம் கூறினார்.
James Heappey தவறாகப் பேசியதாகவும், நாட்டை விட்டு வெளியேறியதால் பிரிட்டிஷ் ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.