பிரித்தானியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி வெளிநாட்டில் கைது
பிரித்தானியாவால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைமருந்து கடத்தல் தொடர்பில் தேடப்பட்டுவந்த மைக்கேல் மூகன், பல போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி சர்வதேச பொலிசாருக்கு 8 ஆண்டுகளாக தண்ணிக்காட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் ஏப்ரல் 21ம் திகதி உள்ளூர் சிறப்பு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லிவர்பூலைச் சேர்ந்த மூகன், பல சர்வதேச அமைப்புகளின் முயற்சிகளின் கீழ் கைது செய்யப்பட்ட 86 வது நபர் ஆவார்.
இந்த நிலையில், மிக விரைவில் மூகன் பிரித்தானியா கொண்டுவரப்பட்டு, அவர் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.