ஈரான் விடுத்த மிரட்டல்... மத்திய கிழக்கு நோக்கி விரையும் பிரித்தானிய விமானப்படை
பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பிரித்தானியா, போர் விமானங்கள் உட்பட கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்துவாதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வெளிப்படை
ஈரான் மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க முன்வரும் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே பிரித்தானியா இந்த முடிவெடுத்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய ஈரானை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் ரகசிய ஒப்புதலுடனே ஈரான் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில்,
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் உறுதி என ஈரான் அறிவித்திருந்தது.
ஈரான் விடுத்துள்ள மிரட்டல்
மட்டுமின்றி, 2000 ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய கிழக்கு நாடுகளை தீக்கிரையாக்கும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என்றும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
தற்போது ஈரான் விடுத்துள்ள மிரட்டலின் உண்மைத்தன்மையை நன்கு உணர்ந்துள்ள பிரித்தானியா விமானப்படை உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய கிழக்கில் முன்னெடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் முதல் மத்திய கிழக்கு நோக்கி புறப்படும் நடவடிக்கைகளை பிரித்தானிய இராணுவம் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் போர் விமானங்கள் மத்திய கிழக்கில் அனுப்பவும் இராணுவம் தயாராக இருப்பதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |