இது ஒழிய போவதில்லை... பிரித்தானியர்கள் இனி இப்படி தான் வாழ வேண்டும்! சுகாதார அமைச்சர் வெளிப்படை
கொரோனாவுடன் வாழ பிரித்தானியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், அது எப்போதும் நம்முடன் இருக்கலாம் என்று சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் நேர்காணலில் பங்கேற்ற பிரித்தானியா சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் இவ்வாறு தெரிவித்தார்.
நேர்காணலில் சாஜித் ஜாவித் கூறியதாவது, நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக மக்கள் காய்ச்சலால்(FLU) இறக்கின்றனர்.
மோசமான காய்ச்சல் (FLU) ஆண்டில் துரதிர்ஷ்டவசமாக சுமார் 20,000 உயிர்களை இழக்க நேரிடும், ஆனால் நாட்டில் முழு பொதுமுடக்கம் அமுல்படுத்தமாட்டோம்.
கொரோனா ஒழிய போவதில்லை. அது நம்முடன் பல, பல ஆண்டுகள், ஒருவேளை என்றென்றும் இருக்கப் போகிறது.
நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பேண்டெமிக் நிலையிலிருந்து எண்டெமிக் நிலைக்கு மாற்றுவதில் ஐரோப்பியாவை விட நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
கொரோனா உடன் எப்படி வாழலாம் என்பதை உலகுக்குக் காண்பிப்பதில் நாம் முன்னணியில் இருக்கிறோம் என சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.