ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்காக போர்ப்பயிற்சியைத் துவக்கும் பிரித்தானியா: 20,000 ராணுவ வீரர்கள் தயார்
மேற்கத்திய நாடுகளை எதிரிகளாகப் பார்க்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின், எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற எண்ணம் மேற்கத்திய நாடுகளுக்கு உருவாகிவருகிறது.
ஆகவே, ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை பிரித்தானியா முதலான நாடுகள் துவங்க உள்ளன.
20,000 ராணுவ வீரர்கள்
உக்ரைன் போர் துவங்கியதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மற்றும் உதவி செய்யும் மேற்கத்திய நாடுகள் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
அவ்வப்போது அவரது ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டலும் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
(Image: Contributor/Getty Images)
இந்நிலையில், ரஷ்யா ஊடுருவினால் அதை எதிர்கொள்ளும் வகையிலும், தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலும், அடுத்த மாதம் நேட்டோ அமைப்பு போர்ப்பயிற்சிகளைத் துவக்க உள்ளது.
31 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பு மேற்கொள்ள இருக்கும் போர்ப்பயிற்சிக்காக, பிரித்தானிய ராணுவம் தனது பங்குக்கு 16,000 ராணுவ வீரர்களுடன், கவச வாகனங்கள், கனரக ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் முதலானவற்றை அனுப்ப உள்ளது.
பிரித்தானிய கடற்படையும், 2,000 வீரர்களுடன், 8 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளையும், 400 சிறப்புப்படை கமாண்டோக்களையும் அனுப்ப உள்ளது.
(Image: Leon Neal/Getty Images)
விமானப்படை சார்பில், F-35B மின்னல் வேக போர் விமானங்கள், P-8 உளவு விமானங்கள் ஆகியவையும் அனுப்பப்பட உள்ளன.
நேட்டோ அமைப்பிலுள்ள எந்த நாட்டை எதிரிகள் தாக்க முற்பட்டாலும், அதை எதிர்கொள்வதற்கு தயாராவதற்காகவே இந்த போர்ப்பயிற்சி என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.