பிரான்ஸ் தலைநகரில் கூட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரித்தானியப் பெண்! இசைக்கச்சேரிக்கு சென்ற இடத்தில் கொடூரம்
பிரான்சின் பாரிஸ் நகரில் பிரித்தானியப் பெண்ணொருவர் கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுற்றுலாப் பயணி
பாரிஸ் நகரின் வீதியில் சனிக்கிழமை அதிகாலை தடுமாறிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அழுதுகொண்டிருந்துள்ளார்.
அவர் பல ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தனிமையான இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரது தொலைபேசியை திருடிச் சென்றதாகவும் அவர் பொலிஸிடம் தெரிவித்ததாக Le Figaro ஊடகம் கூறியுள்ளது.
கச்சேரி ஒன்றில்
குறித்த பெண் சூன் 21ஆம் திகதி ஒலிம்பியா மண்டபத்தில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் தீயணைப்பு வீரர்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாரிஸின் 1வது நீதித்துறை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இதுவரை எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |