பிரிட்டனில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
இங்கிலாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் மாற்றம் குறித்து அந்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. ஓராண்டு கழிந்தும் இன்னும் அதனின் வீரியம் குறையவில்லை.
கொரோனாவை எதிர்த்து போராடும் பேராயுதமாய் தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு உலக நாடுகள் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் முழு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றில் முன்னேற்றங்கள் இருப்பதாக ஆய்வில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இப்படியே சென்றால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி எடுக்குமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சுமார் 1,00,000 பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு டோஸ் பெற்றவர்களை விட தடுப்பூசி போடப்படாத மக்களிடையே கோவிட் தொற்று விகிதம் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் முழு தடுப்பூசி நோய்த்தொற்று விகிதத்தை குறைத்தாலும் இரண்டாவது டோஸ் செலுத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு 1.76% முதல் 0.35% வரை தொற்று விகிதம் மீண்டும் உயர்ந்துள்ளது.