நடுவானில் இயந்திரக் கோளாறு: லண்டன் - சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
லண்டனில் இருந்து சென்னைக்கு பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் லண்டனில் தரையிறங்கியது.
நடுவானில் இயந்திரக் கோளாறு
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் Boeing 787, நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டனிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட லண்டன் - சென்னை சேவையும், அதன் சென்னை - லண்டன் திரும்புதல் சேவையும் என இரண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
⚡ BREAKING: Boeing Again;
— OSINT Updates (@OsintUpdates) June 15, 2025
A British Airways Boeing 787-8 (reg: G-ZBJG) BA35 to Chennai was forced to return to London Heathrow shortly after takeoff from Runway 27R today, June 15. The aircraft leveled off around 9,000 feet before heading back.
Shortly after takeoff from… pic.twitter.com/qcGhUoLlu4
இரு மார்க்கங்களிலும் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தத் தடங்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு, ஜூன் 12-ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 274 பேர் உயிரிழந்த சோகமான விமான விபத்தைத் தொடர்ந்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |