அமெரிக்காவுக்கான விமானங்கள் ரத்து! பிரித்தானிய விமான நிறுவனம் அறிவிப்பு
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 5G குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
அமெரிக்க விமான நிலையங்களுக்கு அருகில் 5G டவர்களை அமைக்கப்படுவது குறித்த சர்ச்சையில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை ரத்து ரத்து செய்துவரும் நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் அமெரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
புதன்கிழமையன்று அமெரிக்க விமான நிலையங்களுக்கு அருகில் மொபைல் போன் சேவையின் C-band strand-ஐ செயல்படுத்துவது விமானங்களின் வழிசெலுத்தல் அமைப்புகளை சீர்குலைக்கும் என்ற அச்சத்தின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போயிங் 777 விமானங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
எமிரேட்ஸ் உட்பட உலகெங்கிலும் உள்ள விமான சேவைகளால் பயன்படுத்தப்படும் Boeing 777 விமானம் குறிப்பாக புதிய அதிவேக வயர்லெஸ் சேவையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அமெரிக்கா முழுவதும் 4,500 டவர்களுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ளன, ஆனால் 88 குறிப்பிடப்படாத விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள 500 டவர்கள் அவை வெளியிடும் அதிர்வெண்கள் விமான ரேடார் தொழில்நுட்பத்தில் தலையிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இயக்கப்படவில்லை.
அந்த டவர்களின் இடைநிறுத்தம் நேற்று மதியம் மட்டுமே முடிவு செய்யப்பட்டது - அந்த நேரத்தில் சில சர்வதேச விமான நிறுவனங்கள் போயிங் 777 விமானங்களைப் பயன்படுத்தும் விமானங்களை ரத்து செய்தன.
5G தொழில்நுட்பத்தின் அறிமுகம் அமெரிக்காவின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் மற்ற இடங்களில் முன்னேறி வருகிறது.
இந்தப் பிரச்சினை விமான நிலையங்களில் பயணக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்துச் செய்தல், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விமானங்கள் இல்லாததால் வெகுஜன இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் புதன்கிழமை ஹீத்ரோவிலிருந்து பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவிற்குச் செல்லும் சில விமானங்களை ரத்து செய்தது.
எமிரேட்ஸ், ஏர் இந்தியா, ஜப்பானை தளமாகக் கொண்ட ஏஎன்ஏ, ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் கொரியன் ஏர் ஆகிய விமான சேவைகளும் விமானங்களை ரத்து செய்யும் பிற விமான நிறுவனங்களில் அடங்கும்.