இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி: மனைவி கண் முன்னே கணவருக்கு நேர்ந்த துயரம்
ஒரு பிரித்தானிய தம்பதி இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி
ஒரு பிரித்தானிய தம்பதியர் இந்தியாவிலுள்ள கோவாவுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். கோவாவில், Canacona என்னுமிடத்திலுள்ள Talpona என்னும் கடற்கரை சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமானதாகும்.
இந்த தம்பதியரும் Talpona கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், கணவனும் மனைவியும் நீந்தச் செல்லும்போது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
இருவரும் அபயக் குரல் எழுப்ப, பாதுகாவலர்கள் ஜெட் ஸ்கீ மூலம் அவர்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் கரைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், இருவருக்கும் உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதில், அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டார்.
ஆனால், அந்த 72 வயதான கணவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. தம்பதியர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த கணவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |