புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்... பிரித்தானிய அமைப்பு மீது புகார்
பிரித்தானிய வலதுசாரி அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சிலர், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்
பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள்.
[A66M0FH
இந்நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.
ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏறமுயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகின.
புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார்
இந்நிலையில், Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
பிரான்சிலுள்ள Calais பகுதியில், Raise the Colours அமைப்பைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்வோரைத் துன்புறுத்துவதாக புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அரசுகள் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், அது வன்முறை மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என எச்சரித்துள்ளன.
Short story பிரித்தானிய வலது சாரி அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், அது வன்முறை மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என எச்சரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |