இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா?
இந்திய வம்சாவளியினரான பிரதமர் ரிஷி பிரித்தானியாவின் பிரதமரானதும், இந்திய மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையே பிரதமரானது போல மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால், ரிஷி பிரதமரானதும், தனக்கு முன்னிருந்த இந்திய வம்சாவளி அமைச்சர்களான பிரீத்தி பட்டேல், சுவெல்லா பிரேவர்மேன் ஆகியோரைப்போலவே, இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பையே ஆயுதமாக கையில் எடுத்தார். புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றார்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளைத் துவக்கினார்.
இப்போது தேர்தல் என்றதும், மீண்டும் அவருக்கு அவரது இந்தியப் பின்னணி நினைவுக்கு வந்திருக்கிறது! மக்களுக்கும் அவர் செய்தவை எல்லாம் நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா?
ஆனால், பிரித்தானியா வாழ் இந்தியர்கள் ரிஷிக்கு வாக்களிப்பார்களா என்றால், அது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
முதல் மற்றும் முக்கியமான விடயம், ரிஷி பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்றாலும், அவரை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை.
போரிஸ் ஜான்சன் பதவி விலகியதும், அவரது இடத்துக்கு நடந்த போட்டியில் ரிஷிக்கு அந்த பதவி கிடைத்தது, அவ்வளவுதான்.
இப்போதும், ரிஷியை accidental prime minister என அழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தொண்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டாளரும் அறங்காவலருமான அஷ்வின் கிருஷ்ணமூர்த்தி என்பவர், பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களிடையே, பொதுவாக, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிரான மன நிலையே காணப்படுகிறது என்கிறார்.
இது புதிய அரசைக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்கிறார்கள் அவர்கள் என்கிறார் அஷ்வின்.
சுமார் 1.8 மில்லியன் பிரித்தானிய இந்தியர்கள் இந்தியாவில் வாழும் நிலையில், பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
இது அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நேரம் என்று கூறும் இந்திய வம்சாவளியினர் அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளரான Raul Lai, அதற்கு புதிய அரசு ஒன்று தேவை என்கிறார். ஆக, ஆட்சி மாற்றம் தேவை என்றே இந்திய வம்சாவளியினர், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
என்றாலும், பிரித்தானிய இந்தியர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும், தேர்தல் திகதி, ஜூலை 4 அல்லவா!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |